திமுகவின் பொருளாளர் ஆகிறார் துரைமுருகன்.. போட்டியின்றி தேர்வு!
திமுகவில் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.
சென்னை: திமுகவில் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். பொதுக்குழுவில் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
மிகவும் முக்கியமான கட்டத்தை திமுக எட்டியுள்ளது. திமுக பொதுக்குழு ஆகஸ்ட் 28ல் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும். இந்த கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது.
இதனால் தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் இன்று பெறப்பட்டது. காலையில் ஸ்டாலினும், துரைமுருகனும் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். 27ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குள் வரை வேட்பு மனுக்களை திரும்பப்பெறலாம்.
பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. தலைவர் பதவிக்கு தற்போதைய செயல்தலைவர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். 28ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும்.
திமுகவில் துரைமுருகனுக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய காலஅவகாசம் இன்று மாலை 4 மணியோடு முடிவடைந்துள்ளது. கடைசி நேரம் வரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இதனால் திமுக பொருளாளர் பதவிக்கு துரைமுருகன், ஒருமனதாக தேர்வாக உள்ளார். யாரும் அவருக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.