நியூட்ரினோ, மருத்துவ படிப்பு ஒதுக்கீடு-திமுக செயற்குழுவில் அசர வைத்த கம்பம் ராமகிருஷ்ணன், பூங்கோதை!
திமுக செயற்குழுவில் கம்பம் ராமகிருஷ்ணன், பூங்கோதை ஆலடி அருணா பேச்சுகள் வரவேற்பை பெற்றனவாம்.
Recommended Video

சென்னை: திமுக செயற்குழுவில் நியூட்ரினோ திட்டத்தால் ஏற்படும் கேடுகள் குறித்தும் முதுநிலை மருத்துவ படிப்பில் பறிபோகும் தமிழக மாணவர்கள் வாய்ப்பு குறித்தும் கம்பம் ராமகிருஷ்ணன், பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் பேசிய பேச்சு பெரும் வரவேற்பை பெற்றது என்கின்றன திமுக வட்டாரங்கள்.
காவிரி பிரச்சனைக்காக திமுகவின் அவசர செயற்குழு சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழுவில் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம், ஏப்ரல் 2-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் என 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கம்பம் ராமகிருஷ்ணன் எழுந்து நியூட்ரினோ திட்டம் என்றால் என்ன? நியூட்ரினோவால் எப்படி ஆபத்து ஏற்படும்? நியூட்ரினோ திட்டத்தால் எதிர்காலத்தில் தேனி மாவட்டம் எதிர்கொள்ளப் போகும் பிரச்சனைகளை விரிவாக வகுப்பு எடுப்பது போல் பட்டியலிட்டாராம். அவரைத் தொடர்ந்து பூங்கோதை ஆலடி அருணா எழுந்து முதுநிலை மருத்துவ படிப்பில் தமிழக மாணவர்களின் வாய்ப்பு பறிபோகும் சூழ்நிலைகளை விவரித்திருக்கிறார்.
அப்போது, நமது பிள்ளைகள் பிடிக்க நாம் கட்டிய மருத்துவ கல்லூரிகளில் வடநாட்டு மாணவர்கள் வந்து படித்துவிட்டு போகிறார்கள். இந்த பிரச்சனையில் நாம் போதிய கவனம் செலுத்த தவறிவிட்டோம்.. இனியாவது இதை கையில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாராம். இதேபோல் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதாம்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் திமுகவும் இணைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அன்னியப்பட நேரும் என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டதாம்.












Click it and Unblock the Notifications