நெடுஞ்சாலைகள் பெயரை மாற்றி டாஸ்மாக் கடைகள் திறக்க முயற்சி: நீதிமன்றத்தில் திமுக முறையீடு
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க சாலைகளை உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நீதிமன்றத்தில் முறையீட்டுள்ளது.
சென்னை : மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க நெடுஞ்சாலைகளை, ஊரக மற்றும் நகர சாலைகளாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இந்த மாதம் மூடப்பட்டது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சிக்களுக்கு உட்பட்ட சாலைகளாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறப்பதற்காக சாலைகளின் பெயர்கள் மாற்றப்படுவதாக புகாரில் திமுக குறிப்பிட்டுள்ளது.
திமுக தொடர்ந்த மனுவை, நாளை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications