சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகும் திமுக.. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் 9 பேர் குழுவை அறிவித்தது!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை மும்முரமாக தொடங்கிவிட்டது தி.மு.க. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க டி.ஆர். பாலு தலைமையில் 9 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை:
சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக்கழகத்தின் தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவினர் விவரம் குறித்து திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

1. டி.ஆர். பாலு - ஒருங்கிணைப்பாளர்
2. கனிமொழி எம்.பி.,
3. பேராசிரியர் அ.இராமசாமி
4. ஆர். சண்முகசுந்தரம்
5. சுப்புலட்சுமி ஜெகதீசன்
6. வி.பி. துரைசாமி
7. என்.ஆர். இளங்கோ
8. டி.கே.எஸ். இளங்கோவன்
9. தங்கம் தென்னரசு
இவ்வாறு தி.மு.க. தலைமைக் கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை எது இலவசம்?
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைப் பொறுத்தவரையில் பிரதானமாக பார்க்கப்படுவது இலவசம் தொடர்பான அறிவிப்புதான்... தி.மு.க.வின் இலவச கலர் டி.வி., 2 ஏக்கர் நிலம் போன்ற அறிவிப்புகள் குறிப்பிடத்தக்கவை.
இந்த வகையில் வரும் சட்டசபை தேர்தலில் திமுக வெளியிடப் போகும் இலவசம் தொடர்பான அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications