மாற்று கருத்தாளருக்கும் மரியாதை … துக்ளக் சோ ராமசாமி மறைவுக்கு திமுக பொதுக்குழு இரங்கல்
மாற்று கருத்தாளராக இருந்த துக்ளக் சோ ராமசாமியின் மறைவிற்கு திமுக பொதுக் குழுவில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும், சற்குணபாண்டியன் மறைவுக்கும் திமுக பொதுக்குழு இரங்கல் தீர்மானம் போடப்பட்டுள்ள
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாற்றுக் கருத்தாளராகவும் திமுகவை எதிர்த்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்த துக்ளக் சோ ராமசாமி மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
திமுக பொதுக்குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 9 மணியளவில் தொடங்கியது. திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி முன்மொழிந்து, க. அன்பழகன் முன்னிலையில் பொதுக் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

இதில், முதலாவதாக மறைந்த உலக மற்றும் தமிழக அரசியல் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தமிழகத்தின் முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ட்ரோ மறைவிற்கும் இரங்கல் தீர்மானம் போடப்பட்டது.
பின்னர், தமிழக அரசியல் களத்தில் திமுகவிற்கு எதிராக பேசியும், எழுதியும் வந்த துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ. ராமசாமியின் மறைவிற்கும் இரங்கல் வாசிக்கப்பட்டது. மேலும், திமுகவைச் சேர்ந்த கோ.சி. மணி மற்றும் சற்குணப்பாண்டியன் ஆகியோரின் மறைவிற்கும் திமுக பொதுக் குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 3,000 பொதுக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திமுக தலைவர் கருணாநிதி பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications