சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு- செப்.3-ல் ஸ்டாலின் போராட்டம்
சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் வரும் 3-ந் தேதியன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கேரளா நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது. அண்மையில் மத்திய அரசு இப்புதிய அணைக்கான சுற்றுச் சூழல் ஆய்வை நடத்த கேரளாவுக்கு அனுமதி அளித்தது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரளாவுக்கு கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதமுன் அனுப்பியிருந்தார்.
ஏற்கனவே மதிமுக சார்பில் கேரளாவுக்கு எதிராக கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் வரும் 3-ந் தேதியன்று கோவையில் கேரளாவை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமை தாங்குவார் என திமுக தலைமை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications