ஆர்.கே நகர் தேர்தலைச் சந்திக்க திமுக பயப்படுகிறது.. அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
ஆர்.கே நகர் தேர்தலைச் சந்திக்க திமுக பயப்படுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கேலி செய்துள்ளார்.
சென்னை: ஆர்.கே நகர் இடைத்தேர்தலைச் சந்திக்க தி.மு.க பயப்படுகிறது என்று கருத்து தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின், ஜெயக்குமார் அமைச்சராக மட்டுமில்லாமல், சூப்பர் முதல்வராகவும், டூப்பர் முதல்வராகவும் செயல்படுகிறார் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ' ஆர்.கே நகர் இடைத்தேர்தலைச் சந்திக்க திமுக பயப்படுவது நன்கு தெரிகிறது. எங்கு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துவிடுமோ என்று பயந்து திட்டமிட்டு மீனவர்கள் பிரச்னையை கிளப்பிவிட்டு அவர்களைப் போராட்டம் செய்ய வைத்தது. அதனால் தான் தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்கவில்லை' என்று தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன், படகுகளில் சீன என்ஜின்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி காசிமேட்டில் மீனவர் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications