அதே காந்த குரலோடு கருணாநிதி மீண்டு வருவார்.. ஸ்டாலினை சந்தித்த வைகோ பேட்டி
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருப்பதாக ஸ்டாலின் கூறினார், அதே காந்தக்குரலோடு கருணாநிதி மீண்டும் பேசுவார் என்று, கோபாலபுரத்தில் வைகோ பேட்டியளித்தார்.
கருணாநிதி உடல் நலிவுற்றிருப்பதாக நேற்று வெளியான காவிரி மருத்துவமனை அறிக்கையை தொடர்ந்து, ஓபிஎஸ் தலைமையில் சீனியர் அமைச்சர்கள் கருணாநிதி இல்லத்திற்கு சென்று, நலம் விசாரித்தனர்.

இன்றும் பல தலைவர்களும் கருணாநிதி இல்லத்திற்கு சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கோபாலபுரம் இல்லம் சென்று, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கருணாநிதி உடல் நலம் பற்றி கேட்டறிந்தார்.
பின்னர், நிருபர்களிடம் வைகோ கூறுகையில், ட்ரக்கியாஸ்டமி செய்தால் சில நேரங்களில் காய்ச்சல் ஏற்படுவது வழக்கம். குணப்படுத்த மருத்துவர்கள் தக்க சிகிச்சையளித்து வருகிறார்கள். கருணாநிதி நலமோடு இருப்பதாக ஸ்டாலின் கூறினார். அவர் முழுமையாக நலம் பெற்று, அதே காந்த குரலோடு மக்களை சந்திக்கும் வாய்ப்பை இயற்கை அன்னை ஏற்படுத்தி தருவாள் என்ற நம்பிக்கையோடு உள்ளேன். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications