கருணாநிதியுடன், திருமாவளவன் சந்திப்பு.. சுயாட்சி மாநாடு அழைப்பிதழ் வழங்கினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்தார்.
கோபாலபுரம் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. செப்டம்பர் 17ல் நடக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில சுயாட்சி மாநாட்டு அழைப்பிதழை கருணாநிதியிடம் வழங்கினார் திருமாவளவன்.

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெறுகிறது. இதனை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அண்மையில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நலம் ஒத்துழைத்தால், இந்த மாநாட்டில் கருணாநிதி பங்கேற்பாரா என்ற என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications