"ஓடுகாலிகள்" விமர்சனத்தால் சர்ச்சை - சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்!
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து இன்று திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
தமிழக சட்டசபையில் நேற்று மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து விவாதிக்க திமுக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. ஆனால் இந்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை.
இதைத் தொடர்ந்து முதலில் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிந

இன்று சட்டசபையில் இந்த விமர்சனம் விஸ்வரூபமெடுத்தது. அமைச்சர் வைத்திலிங்கம் கூறிய ஓடுகாலிகள் என்ற வார்த்தையை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர்.
ஆனால் இதை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி அனைத்து திமுக எம்.எல்.ஏக்களையும் கூண்டோடு வெளியேற்ற சபாநாயக உத்தரவிட்டார்.
தேமுதிக- புதிய தமிழகம் ஆதரவு
பின்னர் சபை காவலர்களால் திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதனிடையே திமுக எம்.எல்.ஏக்களின் கோரிக்கையை ஏற்க வலியுறுத்தி சட்டசபையில் இருந்து தேமுதிக எம்.எல்.ஏக்களும் புதிய தமிழகம் எம்.எல்.ஏ கிருஷ்ணசாமியும் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications