மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கோரும் வழக்கு... இரவு 10.30 மணிக்கு விசாரணை
Recommended Video

சென்னை: மெரீனா கடற்கரையில், திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷை நேரில் சந்தித்து திமுகவினர் மனு அளித்த நிலையில் அந்த மனு மீது இரவு 10.30 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது.
மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் அளிக்க தமிழக அரசு மறுத்து விட்டது. இதுதொடர்பாக பல்வேறு காரணங்களை அது கூறியுள்ளது.

இந்த நிலையில் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுக திமுக திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சரவணன் கூறுகையில், மெரீனா கடற்கரையில் எந்த தடையும் இதுவரை இல்லை. எனவே கருணாநிதிக்கு இடம் தர மறுப்பது அவரை சிறுமைப்படுத்தும் செயல். இது அதிகார போதையில் செய்யும் செயல்.
இதுகுறித்து தற்காலிக தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷை நேரில் சந்தித்து மனு அளிக்கவுள்ளோம். அனுமதி கோரவுள்ளோம். அவசர வழக்காக இதை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கவுள்ளோம் என்றார்.
அதன்படி மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ரமேஷ் குலுவாடி முன்பு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அந்த வழக்கு இன்று இரவு 10.30 மணிக்கு விசாரிப்பதாக அவர் ஏற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications