படம் தப்பு.. மன்னிச்சிருங்க.. இனிமேல் கவனமா இருப்பேன்.. திமுக எம்பி செந்தில்குமார் அதிரடி டிவீட்
சென்னை: சிஏஏ போராட்டத்தால் ஒருவர் காயமடைந்துள்ளார் என நான் பதிவு செய்த புகைப்படம் சாலை விபத்து குறித்த படம் என பலர் கூறுவதால் அதற்கான நான் வருத்தப்படுகிறேன். இனி இது போன்ற புகைப்படங்களை ட்விட்டரில் போடும் போது கவனத்துடன் செயல்படுகிறேன் என திமுக எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றிற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதையடுத்து சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று முன் தினம் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின.

கல் எறிந்தது
அப்போது போலீஸார் அவர்களை கலைந்து போக கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். பதிலுக்கு போலீஸார் மீது போராட்டக்காரர்களும் கல் எறிந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மூன்றாவது நாள்
இதை கண்டித்து சென்னை வண்ணாரப்பேட்டை, பிராட்வே, அண்ணா சாலை, தமிழகத்தின் மதுரை, விழுப்புரம், திருச்சி, நாகை, தேனி, ராமநாதபுரம், கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் திரளான முஸ்லீம்கள் கலந்து கொண்டு தடியடியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

நிலைமைக்கு காரணம்
இதனிடையே சிஏஏ போராட்டத்தில் நடந்த மோதலில் ஒருவர் ரத்தக் காயங்களுடன் இருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்ட திமுக எம் பி செந்தில்குமார் இதற்கு காரணமான அதிமுக அரசும் ராமதாஸும் பதில் சொல்லியே ஆக வேண்டும். பாஜக அமல்படுத்திய சிஏஏவுக்கு நீங்கள் அளித்த ஆதரவு வாக்கின் விளைவுதான் இன்று தமிழகம் சந்திக்கும் இந்த நிலைமைக்கு காரணம் என தெரிவித்திருந்தார்.
|
படம் தப்பு
இந்த நிலையில் இந்த படத்தில் உள்ள நபர் சிஏஏ போராட்டத்தில் காயமடைந்தவர் அல்ல. சாலை விபத்தில் காயமடைந்தவர் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து திமுக எம்பி செந்தில் குமார் மீண்டும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் நான் எனது பதிவில் வெளியிட்ட நபர் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் காயமடைந்தவர் இல்லை என்றும் அவர் சாலை விபத்தில் காயமடைந்தவர் என்றும் நண்பர்கள் சிலர் எனக்கு தெரிவித்தனர். ஒரு வேளை நான் பதிவு செய்ய புகைப்படம் தவறு என்றால் அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். இனி ஆதாரப்பூர்வமற்ற தகவல்களை ட்விட்டரில் பதிவு செய்வதற்கு முன்னர் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து கவனத்துடன் செயல்படுவேன் என தெரிவித்தார்.
-
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications