வீடு முன் அழுத பெண்.. நடிகர் விஜய் மீது திமுக எம்பி நம்பிக்கை! ரசிகர்கள் இப்படி செய்றது இயல்புதானாம்
சென்னை: நடிகர் விஜயை காண அவரது வீட்டின் முன் இளம்பெண் ஒருவர் கை எடுத்து கும்பிட்டு அழுத காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் நிலையில், ட்விட்டரில் அதை பகிர்ந்து உள்ள தருமபுரி தொகுதி திமுக எம்பி செந்தில்குமார், தனது ரசிகையின் ஆசையை நடிகர் விஜய் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
தமிழ் மட்டுமின்றி இந்திய அளவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். காஷ்மீரில் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் நடிகர்களிலேயே அதிகளவு ரசிகர்களை வைத்திருக்கும் விஜய்யை காண வேண்டும் என்பது பலரது ஆசை. இதற்காகவே அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் திரண்டு அவரை சந்திக்க முயல்வது வாடிக்கை. காஷ்மீரில் இருந்து வந்த பிறகு சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்பதே விஜயின் விருப்பமாக இருந்ததாம்.
ஆனால், எங்கு சென்றாலும் ரசிகர்கள் கூட்டம் வந்துவிடுவதால் படப்பிடிப்பில் இடையூறுகள் ஏற்படும் என்று கூறி ஐதராபாத்துக்கு படப்பிடிப்பை மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கும் விஜய்க்காக சமூக வலைதளங்களில் எப்போதும் ஏதாவது ஒரு ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் விஜயை பார்க்க வேண்டும் என சிறுமி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டான நிலையில், அவரிடம் வீடியோ கால் செய்து நடிகர் விஜய் பேசினார். விஜய்யின் இந்த செயல் மக்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. சென்னை நீலாங்கரையில் அமைந்து இருக்கும் நடிகர் விஜய்யை காண அவரது வீடு முன் ரசிகர்கள் திரள்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான் காஞ்சிபுரத்தை சேர்ந்த இளம் பெண் ரசிகை ஒருவர் நடிகர் விஜய் வீட்டின் முன் நின்றுகொண்டு, கண்காணிப்பு கேமராவை நோக்கி உங்களை பார்க்க வேண்டும் அண்ணா என்று சொல்லி அழும் காட்சி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. பானிபூரி வியாபாரம் செய்து வரும் சங்கர் என்பவரது மகள், விஜயின் நீலாங்கரை வீட்டின் கதவை அணைத்தும், விஜய் வீட்டு வாசலை தொட்டும் வணங்குகிறார். நீங்கள் அழைப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கொள்கிறேன்." என்றார்.

இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பெண்ணின் தந்தை, விஜய் தன் மகளை அழைத்து புகைப்படம் எடுத்துக்கொள்வார் என்று தாங்கள் நம்புவதாக தெரிவித்து உள்ளனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில் தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரும் இதை பகிர்ந்து உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருக்கும் அவர், "நடிகர் விஜய் அவர்கள் இந்த பாசமிகு காஞ்சிபுரம் சார்ந்த ரசிகையின் ஆசையை நிறைவேற்றுவார் என நம்பிக்கை உள்ளது. ரசிகர்கள் திரைப்படங்களின் நடிகர்களை ஓர் முறையாவது சந்தித்து புகை படம் எடுக்க வேண்டும் என ஆசை படுவது இயல்பு தான்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு!












Click it and Unblock the Notifications