பேறுகால விடுப்பு 9 மாதம்...: மகப்பேறு நிதி உதவி ரூ.18000- மகளிரை கவர திமுக அதிரடி
சென்னை: சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மகப்பேறு நிதி உதவி ரூ. 18000 ஆக உயர்த்தப்படும் என்றும்,
கருவில் இருக்கும் குழந்தைக்கும், கர்ப்பிணிகளுக்கும் காப்பீடு செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி. பேறுகால விடுப்பு 9 மாதமாக உயர்த்தி மகளிரைக் கவரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது திமுக.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கை ஞாயிறன்று வெளியானது. அதில் முதியோர், மகளிரைக் கவரும் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

முதியோர் உதவித்தொகை ரூ.1,300 ஆக உயர்த்தப்படும். பட்டதாரிப் பெண்கள் கலப்புத் திருமண உதவித் தொகை ரூ.60,000 மற்றும் 4 கிராம் தங்கம் அளிக்கப்படும். முதியோருக்குக் கட்டணமில்லா பயணச் சலுகை அளிக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மகளிரைக் கவரும் வகையில் பேறுகால விடுமுறை 9 மாதமாக உயர்த்தப்படும். மகப்பேறு நிதி உதவி ரூ. 18000 ஆக உயர்த்தப்படுவதாகவும், கருவில் இருக்கும் குழந்தைக்கும், கர்ப்பிணிகளுக்கும் காப்பீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏழை, எளிய, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள கருவுற்ற தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிதியுதவி ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த 2011 முதல் ரூ.12 ஆயிரமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம், முதல் தவணையாக கருவுற்ற 7ஆவது மாதத்தில் நல்ல முறையில் உடல் நலனைப் பேணுவதற்காக ரூ.4,000, 2-ஆவது தவணையாக அரசு, உள்ளாட்சி மருத்துவமனைகளில் குழந்தை பிறந்த நாளன்று ரூ.4,000, மூன்றாவது தவணையாக குழந்தைக்கு 3-ஆவது தடுப்பூசி போடும் நாளன்று ரூ.4,000 என ரூ.12,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்த உதவித் தொகையைப் பெற கருவுற்ற பெண் 19, அதற்கும் மேலான வயதுடையவராகவும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராகவும் இருக்க வேண்டும். முதல் 2 பிரசவத்துக்கு மட்டுமே இந்தத் திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இலங்கை அகதிகளாக உள்ள தாய்மார்களுக்கும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் பயனாளிகளுக்கும் இந்தத் திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் திமுக வெளியிட்டுள்ள சட்டசபைத் தேர்தல் அறிக்கையில் மகப்பேறு நிதி உதவி ரூ. 18000 ஆக உயர்த்தப்படுவதாகவும், கருவில் இருக்கும் குழந்தைக்கும், கர்ப்பிணிகளுக்கும் காப்பீடு செய்யப்படும் என்றும் மகப்பேறு விடுமுறைக்காலம் 9 மாதகால அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications