For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாமூல் பெற்றுக்கொண்டு குட்கா விற்க அனுமதி தந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர்.. ஸ்டாலின் குற்றச்சாட்டு

மாமூல் பெற்றுக்கொண்டு குட்காவை சுதந்திரமாக விற்க அனுமதி தந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மாமூல் பெற்றுக்கொண்டு குட்கா விற்க அனுமதி தந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர்-வீடியோ

    சென்னை: மாமூல் பெற்றுக்கொண்டு குட்காவை சுதந்திரமாக விற்க அனுமதி தந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

    குட்கா விவகாரத்தில் போராட்டம் நடத்திய திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    DMK Protest in Coimbatore against DMK workers arrest

    அப்போது குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஜனநாயக முறையில் போராடிய திமுகவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

    குட்கா விவகாரத்தில் நியாயம் கேட்டு சென்றவர்கள் மீது போலீஸ் பொய் வழக்கு போட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்தார். மேலும் கைது நடவடிக்கையை கண்டு அடங்கி, ஒடுங்கிவிட மாட்டோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

    அமைச்சர் விஜயபாஸ்கர் புற்றுநோயை ஏற்படுத்தும் குட்காவுக்கு அனுமதி வழங்கியுள்ளார் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மாமூல் பெற்றுக்கொண்டு குட்காவை சுதந்திரமாக விற்க அனுமதி தந்தவர் விஜயபாஸ்கர் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

    ரூ.40 கோடிக்கு மேல் லஞ்சம் தரப்பட்டது டைரியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

    English summary
    DMK Protest in Coimbatore against DMK workers arrest. DMK working president Stalin accusses that Vijayabaskar allowed Gutkha in Tamilnadu after getting bribe.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X