கடலூரில் நாளை "நீதி கேட்கும் பேரணி"... 10 மாவட்ட தி.மு.க.வினர் திரள்கின்றனர்..
கடலூர்: கடலூர் புதுச்சத்திரத்தில் தி.மு.க. சார்பாக நாளை பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். இக்கூட்டத்தில் 10 மாவட்ட தி.மு.க.வினர் பங்கேற்க உள்ளனர்.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில் முக்கிய நகரங்களில் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்களை தி.மு.க. ஏற்பாடு செய்து வருகிறது. கடந்த மே 24-ந் தேதி மதுரையில் 18 மாவட்ட செயலாளர்களின் ஏற்பாட்டில் கூட்டம் நடைபெற்றது.
அதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். இந்த நிலையில் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட கட்சி ரீதியான 17 மாவட்ட தி.மு.க. சார்பாக கடலூரில் நாளை பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
"நான்காண்டுகளாய் துருப்பிடித்துக் கிடக்கும் தமிழ்நாடு- நீதி கேட்கும் பேரணி" என்ற தலைப்பிலான இந்த பொதுக் கூட்டத்துக்கு கடலூர்-சிதம்பரம் சாலையில் புதுச்சத்திரம் பகுதியில் 125 ஏக்கர் பரப்பில் பொதுக்கூட்ட திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்ட ஏற்பாடுகளை திமுக மாவட்ட செயலாளர்கள் பார்வையிட்டனர்