மிஸ்டர் அன்புமணி! நீங்க நிர்வகிக்க தமிழகம் ஒன்றும் தைலாபுரம் தோட்டம் அல்ல..
அ.தி.மு.க. கஜானாவை சுரண்டியது போக மிச்சமிருப்பதை சுரண்டுவதற்கு திட்டத்தை தீட்டியிருக்கிறீர்களா? கடமை உணர்வும் நேர்மையும் இல்லாத உங்களை, டெல்லி நீதிமன்றத்தில் ஊழல் வழக்கில் ஆஜராகிக் கொண்டிருக்கும் உங்களை மருத்துவராகவும், அரசியல்வாதியாகவும் எப்படி கருத முடியும்?
ஆகவே தமிழகம் என்பது தைலாபுரம் தோட்டம் அல்ல. நீங்கள் நிர்வகிப்பதற்கு. அதே போல் இந்த வன்னியர் சமுதாயம் ஒன்றும் உங்கள் ஏமாற்றுப் பேச்சுக்களை நம்பி மோசம் போவதற்கு தயாராகவும் இல்லை. தி.மு.க.வும், தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலினும் இந்த சமுதாயத்திற்காக ஆற்றிய பணிகளை அவ்வளவு எளிதில் உங்களது கோயபல்ஸ் பிரச்சாரத்தால் முறியடித்து விட முடியாது.

தங்களையும், தங்கள் கட்சியையும் மக்கள் நம்புவார்கள் என்ற தங்களின் கனவு பகல் கனவாகவே இருக்கும்.
தாங்கள் இப்போது செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஸ்டாலினிடம் உழைப்பை கற்றுக் கொள்ளுங்கள். அவர் செய்த தியாகத்தைப் படியுங்கள். தேவைப்பட்டால் பிரபல பத்திரிக்கையாளர் சோலை அவர்கள் எழுதிய தளபதி பற்றிய புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்.
"வெட்டியாக கடிதம்" எழுதி இப்படி உங்கள் நேரத்தை மட்டுமின்றி தமிழக மக்களின் நேரத்தையும் வீணடிக்காமல், அரசியலில் அரிச்சுவடியை ஸ்டாலின் புத்தகத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் அவரது தியாகத்தில் ஒரு சதவீதமாவது செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். கூடவே வன்னியர் சமுதாயத்தை "வசனம்" பேசியே வஞ்சிக்காமல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல்வேறு திட்டங்களால் முன்னேறிக் கொண்டிருக்கும் அந்த சமுதாயத்தை தொந்திரவு பண்ணாமல் தயவு செய்து விட்டு விடுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications