திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனிக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் !
சென்னை: திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனிக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக கூறி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக கட்சியின் சட்டத்துறை துணைச் செயலர் கே.எஸ்.ரவிச்சந்திரன், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று கொடுத்த மனு:

எங்களது கட்சியைச் சேர்ந்த பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, கடந்த 7-ஆம் தேதியன்று திருவண்ணாமலையில் கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். அதன் பின்னர் சென்னைக்கு திரும்பினார். இந்நிலையில் அறிமுகமில்லாத பல்வேறு செல்போன் எண்களில் இருந்து லியோனி செல்போனுக்கு அழைப்புகள் வருகின்றன.
அந்த அழைப்பில் பேசும் நபர்கள், லியோனிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறு செய்யும் வகையிலும் பேசி வருகின்றனர். மேலும் தாங்கள் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக் கொண்டு, அன்புமணி ராமதாஸ் குறித்து பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது எனவும் கேட்டு மிரட்டுகின்றனர்.
அதேபோல சமூக வலைதளங்களிலும் லியோனி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர். எனவே போலீஸார், சம்பந்தப்பட்டவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications