கருப்பசாமி பாண்டியன் மீதான பாலியல் புகார் விவகாரம் - மாலைராஜா திமுகவில் இருந்து சஸ்பென்ட்!
சென்னை: திருநெல்வேலி மாவட்ட திமுக செயலர் கருப்பசாமி பாண்டியன் மீது பாலியல் புகார் கொடுத்த விவகாரத்தில் பின்னணியில் இருந்ததாக அக்கட்சியின் முன்னாள் மாநகர திமுக செயலர் மாலைராஜா சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி திமுக பிரமுகர் நாலடியாரின் மகள் தமிழரசி நெல்லை காவல்துறையில் நேற்று ஒரு புகார் கொடுத்திருந்தார்.

கேர்ள் பிரண்டாக இருக்க வேண்டும்
அந்தப் புகாரில், திமுகவில் பொறுப்பு வாங்கிக் கொடுக்க வேண்டுமெனில் தமக்கு கேர்ள் பிரண்டாக இருக்க வேண்டும் என்று மாவட்ட செயலர் கருப்பசாமி பாண்டியன் வலியுறுத்தியதுடன் குற்றாலத்தில் தம்மிடம் வக்கிரமாகவும் நடந்து கொண்டதாக கூறியிருந்தார்.

கொலை மிரட்டல்
மேலும் கருப்பசாமி பாண்டியன் தரப்பில் இருந்து தமக்கு கொலை மிரட்டல் வழக்கு வருவதாகவும் அந்தப் புகாரில் தமிழரசி கொடுத்திருந்தார்.

கண்டுக்காத திமுக
திமுக தலைமைக்கு தாம் இந்தப் புகாரை 2 வாரத்துக்கு முன்பே அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததாலேயே போலீசில் புகார் கொடுக்கப்படுவதாகவும் தமிழரசி குறிப்பிட்டிருந்தார்.

'க'னா மீது புகார் பதிவு
இந்தப் புகாரைத் தொடர்ந்து கருப்பசாமி பாண்டியன் மீது நெல்லை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் கருப்பசாமி பாண்டியன் தரப்போ, கட்சியில் எதிராக இருக்கும் மாலைராஜாவின் தூண்டுதலின் பேரிலேயே இந்தப் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறியது.

பின்னணியில் மாலைராஜா
இதனிடையே தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கருப்பசாமி பாண்டியன் பெயருக்கு களங்கம் விளைவிக்க துணை போவதால் மாலைராஜா சஸ்பென்ட் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாலைராஜா சஸ்பென்ட்
அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலியை சேர்ந்த மாலைராஜா, மாநகர தி.மு.க. செயலாளராக செயல்பட்டு வந்த போது, நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தவுடன், மாநகர செயலாளர் பொறுப்பில் இருந்து விலகி, ஒதுங்கியிருந்து விட்டு, தற்போது தி.மு.க. கட்டுப்பாட்டை மீறியும், தி.மு.க.விற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், குறிப்பாக மாவட்ட செயலாளரை தரக்குறைவாகவும், அவரது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும் செய்திகள் வெளிவருவதற்கு துணை போவதாக அறிவதால் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

மு.க. அழகிரி ஆதரவாளர்
தற்போது கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கும் மாலைராஜா மு.க. அழகிரியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
மார்ச் 23.. 6 சீட்டுக்கு 1 குறைஞ்சா கூட மீண்டும் அழைக்காதீங்க.. திமுகவுக்கு கெடு விதித்த சிபிஎம்! -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
வெயிட்டாக எதிர்பார்க்கும் காங்., அசைந்து கொடுக்குமா அறிவாலயம்? லிஸ்டோடு தவிக்கும் கதர் கட்சியினர்! -
திமுகவிடம் 10 தொகுதிக்கான பட்டியலை கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்! மறுபடியும் முதல்ல இருந்தா?












Click it and Unblock the Notifications