காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் பட்ஜெட் தாக்கல் செய்வதா? வெளிநடப்புக்கு பின் மு.க.ஸ்டாலின் கேள்வி
Recommended Video

சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக ஏன் வெளிநடப்பு செய்தது, திமுக உறுப்பினர்கள் ஏன் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்தனர் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய துவங்கியதும் ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, சட்டசபையில், சிறப்பு தீர்மானம் கொண்டுவந்து மத்திய அரசை வலியுறுத்த கேட்டுக்கொண்டேன். ஆனால், பொறுத்திருந்து 8ம் தேதி சட்டசபை கூட்டத்தை முடிவு செய்யலாம் என்று அரசு தரப்பில் என்னிடம் தெரிவித்தனர்.
பின்னர், தென் மாநில தலைமைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் நடைபெற உள்ளது. அது முடிந்த பிறகு, சட்டசபையை கூட்டலாம் என ஓ.பன்னீர்செல்வம் என்னிடம் கூறினார். அப்போதே, இது காலம் தாழ்த்த நடத்தப்படும் நாடகம் என்று நான் சொன்னேன். ஆனால் இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு அவையை கூட்டலாம் என ஓபிஎஸ் சொன்னார்.
மத்திய அரசு கூட்டிய கூட்டம் என்பதால் நானும் ஒப்புக்கொண்டேன். ஆனால் கூட்டத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, அந்த கூட்டத்தில் மத்திய அரசு நிலைப்பாட்டை எடுத்தது. இந்த நிலையில்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, நடவடிக்கை எடுக்காமல், பட்ஜெட் தாக்கல் செய்யும் தமிழக அரசை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது. கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளோம். ராஜ்யசபாவிலும் திமுக உறுப்பினர்கள் இன்று கருப்பு சட்டை அணிந்தே கூட்டத்தொடரில் பங்கேற்பார்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications