திமுக இருக்கும் வரை தமிழகத்திற்குள் ஹிந்தியை நுழைய விடமாட்டோம்: துரைமுருகன் சூளுரை
சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஹிந்தி திணிப்பு, நீட் தேர்வை புகுத்தலை எதிர்த்து, பாஜக அரசை கண்டித்து சென்னை, அமைந்தகரையில் கருத்தரங்கம் நடந்தது. சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை வகித்தார்.
இந்த கருத்தரங்கில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். துரைமுருகன் பேசுகையில், "தமிழகத்தில் கடந்த காலங்களில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திமுகதான், பெரும் பங்கு வகித்தது. தற்போதுள்ள மத்திய அரசு தமிழகத்தில் ஹிந்தியை புகுத்த முயன்று வருகிறது. திமுக இருக்கும்வரை தமிழகத்தில் ஹிந்தியை நுழைய விட மாட்டோம். தடுத்து விரட்டுவோம்.

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு கோர தமிழக ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழகத்தில்குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் ஒரு போதும் திமுகவுக்கு கிடையாது.
அதேநேரம், ஜனநாயக முறையில், திமுக ஆட்சிக்கு வரும். மக்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்துவோம். இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications