சிறப்பு சட்டசபையை கூட்டவேண்டும்.. அவசர சட்டம் இயற்ற வேண்டும்... ஸ்டாலின்
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பு சட்டசபையை கூட்ட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக தமிழக அரசு சிறப்பு சட்டசபையை கூட்ட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தீவிரப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழக அரசு சிறப்பு சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஜல்லிக்கட்டுக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் ஜல்லிக்கட்டுக்கோரி உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications