அடுத்து திமுக ஆட்சிதான்... பணபலம் தலைதூக்கினால் ராஜதந்திரத்துடன் எதிர்கொள்வோம்: துரைமுருகன்
உதகை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைக்கும்; தேர்தலில் பணபலம் தலைதூக்கினால் அதை திமுக ராஜதந்திரத்துடன் எதிர்கொள்ளும் என்று அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
உதகையில் செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:
வரும் சட்டசபை தேர்தலில் திமுகவின் வெற்றி பிரகாசமாக தெரிகிறது. திமுகவினர் ஒற்றுமையுடன் இருந்து வெற்றியை பெற வேண்டும்.

திமுக ஆட்சி அமைக்க வேண்டும். கருணாநிதி முதல்வராக அமர வேண்டும். சட்டசபை தேர்தலில் பணபலம் தலைதூக்கினாலும் அதனை திமுக ராஜதந்திரத்துடன் எதிர்கொள்ளும்.
யாரோடு கூட்டணி என செய்தியாளர்களிடம் சொல்லமுடியாது. பத்திரிகைகள் மூலமாக ஒரு கூட்டணி அமைவது குறித்து முடிவு செய்தால் அந்த கூட்டணி உருப்படாது. கூட்டணி அமைப்பது என்பதெல்லாம் தேர்தல் ராஜதந்திரங்கள். கூட்டணி அமைவதில் ரொம்ப பெரிய டிப்ளமசி எல்லாம் கையாள வேண்டி இருக்கிறது. அதனால இவர்கள் இருப்பார்கள். அவர்கள் இருப்பார்கள்னு எல்லாம் சொல்ல முடியாது.
தேர்தல் அறிக்கையில் பல நல்ல அம்சங்கள் இருக்கிறது. அது ரகசியம். அதையும் இப்போது சொல்ல முடியாது.
நான் எம்.ஜி.ஆர். ஆட்சி காலம் முதல் சட்டசபையில் பங்கு பெற்றிருக்கிறேன். இப்போதைய சட்டமன்றத்தில் கருணாநிதிக்கு அடுத்து சீனியர் மோஸ்ட் மெம்பர் என்ற முறையில் சபையில் நான் இருக்கிறேன். நான் பார்த்தவரையில் பேச்சுரிமையே இல்லாத சட்டசபை இது தான். விளக்கத்தை கேட்க கூட விடமாட்டார்கள். ஏதாவது ஒன்று பேசினால் குறுக்கீடு என வர்ணனையோடு ஆரம்பித்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.












Click it and Unblock the Notifications