தவறான சிகிச்சையால் ஜெயலலிதா மரணம்.. ஆஸ்தான டாக்டர் பகீர் குற்றச்சாட்டு
எனது சிகிச்சை தொடர்ந்திருந்தால், இப்போது ஜெயலலிதா 100 சதவீதம் நலமோடு இருந்திருப்பார் என்று டாக்டர், ஷங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை: தவறான சிகிச்சையால் ஜெயலலிதாவுக்கு மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று அவருக்கு முன்பு சிகிச்சையளித்து வந்த டாக்டர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
ஆளுநராக இருந்த ரோசய்யா உள்ளிட்ட பல விஐபிகளுக்கு சிகிச்சை அளித்தவர் டாக்டர் எம்.என்.ஷங்கர். இவர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் கூட 7 வருடங்களுக்கு முன்பு சிகிச்சையளித்த அனுபவம் உள்ளவர். அக்குபங்சர் துறையில் பிரபலமானவர். ஜெயலலிதாவுக்கும் கடந்த வருடம் இவர் சிகிச்சையளித்திருந்தாராம்.

இந்நிலையில் 'பர்ஸ்ட்போஸ்ட்' என்ற ஆங்கில இணையதளத்திற்கு டாக்டர் ஷங்கர் அளித்துள்ள பேட்டி: கடந்த வருடம் ஜூன் மாதவாக்கில், ஜெயலலிதாவால் சிறிதும் நடமாட முடியாத சூழல் உருவானது. அப்போது என்னை சிகிச்சையளிக்க அழைத்தனர். நான் சிகிச்சையளித்த பிறகு ஆகஸ்ட் மாத வாக்கில், ஜெயலலிதாவால் வலியின்றி எளிதாக நடக்க முடிந்தது.
ஆனால், இதன்பிறகு என்னை சிகிச்சையளிக்க அழைக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்து வந்த சசிகலாவின் சொந்தக்காரரான (இளவரசியின் மருமகன்) டாக்டர்.சிவகுமாரோ, ஜெயலலிதா இப்போது நலமாக இருப்பதாக என்னிடம் தெரிவித்து விட்டார்.
சிறப்பாக உடல் நிலையில் முன்னேற்றம் கண்டு வந்த ஜெயலலிதா, திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். எனது சிகிச்சை தொடர்ந்திருந்தால், இப்போது ஜெயலலிதா 100 சதவீதம் நலமோடு இருந்திருப்பார் என்று ஷங்கர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 22ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு என கூறி ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications