ஒரு வாரம் ஓய்வெடுங்க மருத்துவர் ஐயா... ராமதாஸிற்கு டாக்டர்கள் அறிவுரை
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸை ஒரு வாரம் ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்தாண்டு மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் பெருவிழாவின்போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட அக்கட்சியினர் பலர் கைது செய்யப்பட்டனர். ஒரு வாரத்திற்கும் சிறைவாசம் அனுபவித்த ராமதாஸ், விடுதலைக்குப் பின்னர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையடுத்து சில மாதங்கள் ஓய்வில் இருந்தார். பின்னர் மீண்டும் தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபடலானார்.

இந்நிலையில் வழக்கம் போல நேற்று மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருந்தார் ராமதாஸ். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஒருவார காலம் ஓய்வில் இருக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் மருத்துவர்கள் அறிவுரைப் படி ஓய்வெடுப்பதா அல்லது தேர்தல் பணிகளில் ஈடுபடுவதா என ஆலோசிக்கப் பட்டு வருகிறதாம்.












Click it and Unblock the Notifications