For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாடியிலிருந்து கொடூரனால் தூக்கி வீசப்பட்ட நாய் சென்னையில் உயிரோடு மீட்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வாலிபரால் மாடியிலிருந்து துாக்கி வீசப்பட்ட நாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குட்டி நாயை, ஒரு வாலிபர் கீழே வீசி மகிழ்ச்சியடைவது போன்ற காட்சி கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இதை வீசியவர் யார் என்பது தெரியவந்துள்ளது.

Dog which is thrown from building saved

நெல்லை சேர்ந்த கவுதம் சுதர்சன் மற்றும் ஆஷிஷ் பால் ஆகியோர்தான் இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. கவுதம் சென்னையில் எம்.பி.பி.எஸ்., படிக்கின்றனர். குன்றத்தூரில், கவுதம் தங்கியிருந்த மாடிக்கு நாய் ஒன்று வந்தது. அதை அவர் 4 வது மாடியிலிருந்து துாக்கி வீசினார். இதை வீடியோ படம் எடுத்த ஆஷிஷ் பால் இணையத்தில் வெளியிட்டார்.

புகார் பதிவான நிலையில், இதை அறிந்த இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இந்நிலையில் துாக்கி வீசப்பட்ட இடத்திற்கு சென்ற ஒருவர் நான்கு கால்களிலும் காயத்துடன் உயிருக்கு போராடிய நாயை மீட்டு பாதுகாப்பு வழங்கியுள்ளார். தற்போது நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

English summary
Dog which was thrown from a building by a youth saved by people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X