சங்கரராமன் கொலை புகழ் தாதா அப்பு மரணம்... புற்றுக்கு நோய்க்குப் பலியானார்
சென்னை: சென்னையின் பிரபல தாதாக்களில் ஒருவராக திகழ்ந்தவரும், சங்கரராமன் கொலையில் கூலிப்படையை ஏவியதாக குற்றம் சாட்டப்பட்டுக் கைதானவருமான அப்பு ஆந்திராவில் மரணமடைந்தார். எலும்பு புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார் அப்பு.

சென்னை கோபாலபுரத்தில் வசித்து வந்தவர் அப்பு. 59 வயதான இவர் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதன் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமானார். சங்கரராமனைக் கொலை செய்யத் தேவையான கூலிப்படையை இவர்தான் அனுப்பி வைத்தார் என்பது போலீஸ் குற்றச்சாட்டு. நீண்ட காலமாக நடந்து வந்த கொலை வழக்கிலிருந்து ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட அனைவருமே விடுவிக்கப்பட்டனர். அப்புவும் விடுதலையானார்.
சங்கரராமன் கொலைக்குப் பின்னர் ஒதுங்கி வாழ ஆரம்பித்தார் அப்பு. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செம்மரக் கட்டைக் கடத்தல் தொடர்பாக ஆந்திர மாநில போலீஸார் அப்புவைக் கைது செய்தனர். இந்த நிலையில் ஜனவரி 3ம் தேதி உடல் நல பாதிப்பு காரணமாக காக்கிநாடா மருத்துவமனையில் அப்புவை போலீஸார் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று மாலை மரணமடைந்தார். எலும்பு புற்றுநோய் முற்றிய காரணத்தால் அவர் மரணமடைந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவைச் சேர்ந்தவர்
அப்புவின் உண்மையான பெயர் கம்சானி கோபாலகிருஷ்ண மூர்த்தி என்கிற அன்புசெல்வம் என்கிற அப்பு ஆகும். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், வெதுரு குப்பம் மண்டலம் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் பல ஆண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி சென்னைக்கு வந்தவர். அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தி் கொண்டு ரவுடியானார். பின்னர் ஹைடெக் தாதாவானார். கொலை, கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற பல வழக்குகள் இவர் மீது போடப்பட்டன.
சங்கரராமன் கொலை வழக்கு தவிர ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு, சென்னகேசவலு கொலை வழக்கு ஆகியவையும் இவர் மீது போடப்பட்டிருந்தன.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications