சங்கரராமன் கொலை புகழ் தாதா அப்பு மரணம்... புற்றுக்கு நோய்க்குப் பலியானார்
சென்னை: சென்னையின் பிரபல தாதாக்களில் ஒருவராக திகழ்ந்தவரும், சங்கரராமன் கொலையில் கூலிப்படையை ஏவியதாக குற்றம் சாட்டப்பட்டுக் கைதானவருமான அப்பு ஆந்திராவில் மரணமடைந்தார். எலும்பு புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார் அப்பு.

சென்னை கோபாலபுரத்தில் வசித்து வந்தவர் அப்பு. 59 வயதான இவர் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதன் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமானார். சங்கரராமனைக் கொலை செய்யத் தேவையான கூலிப்படையை இவர்தான் அனுப்பி வைத்தார் என்பது போலீஸ் குற்றச்சாட்டு. நீண்ட காலமாக நடந்து வந்த கொலை வழக்கிலிருந்து ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட அனைவருமே விடுவிக்கப்பட்டனர். அப்புவும் விடுதலையானார்.
சங்கரராமன் கொலைக்குப் பின்னர் ஒதுங்கி வாழ ஆரம்பித்தார் அப்பு. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செம்மரக் கட்டைக் கடத்தல் தொடர்பாக ஆந்திர மாநில போலீஸார் அப்புவைக் கைது செய்தனர். இந்த நிலையில் ஜனவரி 3ம் தேதி உடல் நல பாதிப்பு காரணமாக காக்கிநாடா மருத்துவமனையில் அப்புவை போலீஸார் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று மாலை மரணமடைந்தார். எலும்பு புற்றுநோய் முற்றிய காரணத்தால் அவர் மரணமடைந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவைச் சேர்ந்தவர்
அப்புவின் உண்மையான பெயர் கம்சானி கோபாலகிருஷ்ண மூர்த்தி என்கிற அன்புசெல்வம் என்கிற அப்பு ஆகும். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், வெதுரு குப்பம் மண்டலம் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் பல ஆண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி சென்னைக்கு வந்தவர். அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தி் கொண்டு ரவுடியானார். பின்னர் ஹைடெக் தாதாவானார். கொலை, கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற பல வழக்குகள் இவர் மீது போடப்பட்டன.
சங்கரராமன் கொலை வழக்கு தவிர ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு, சென்னகேசவலு கொலை வழக்கு ஆகியவையும் இவர் மீது போடப்பட்டிருந்தன.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications