நாமக்கல்: அங்கீகாரம் பெறாத 13 பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: உரிய அங்கீகாரம் இல்லாமல் நாமக்கல்லில் இயங்கி வரும் 13 தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோபிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடையின்மை சான்று பெற விண்ணப்பிக்குமாறு தெரிவித்தும் இதுவரை பள்ளிக் கல்வித்துறையின் தடையின்மை மற்றும் அங்கீகாரச் சான்று பெறாமலேயே சில பள்ளிகள் இயங்கி வருகிறது.

Don't admit your children Unauthorized schools

தடையின்மை மற்றும் அங்கீகாரச் சான்று பெறாத பள்ளிகள் விவரம்:

1.ஓலப்பாளையம் - மில்லினியம் எக்ஸல் அகாடமி பள்ளி
2.அணியாபுரம் - பார்க் வியூ அகாடமி பள்ளி
3.புதுச்சத்திரம் - ஆர்ஜிஆர் இண்டர்நேஷனல் பள்ளி,
4.ரெட்டிப்புதூர் - ஸ்ரீகுருகுலம் பள்ளி
5.ஏ.கே.சமுத்திரம் - ஞானோதயா பள்ளி
6.திருச்செங்கோடு - விரிக்ஷா குளோபல் பள்ளி
7.திருச்செங்கோடு - வித்யுத் பப்ளிக் பள்ளி
8.கோனூர் - குளோபல் டிஸ்கவரி அகாடமி
9.எஸ்.பி. புதூர் - துரோணாஸ் பப்ளிக் பள்ளி
10.கூலிப்பட்டி - மகாபாரதி பள்ளி
11.எருமப்பட்டி - நாளந்தாஸ் இண்டர்நேஷனல் அகாடமி,
12.ராசிபுரம் - எஸ்ஆர்வி இண்டர்நேஷனல் பள்ளி
13.முத்துகாளிப்பட்டி - எஸ்ஆர்பி இண்டர்நேஷனல் பள்ளி

ஆகிய 13 சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டாம் என கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளிக்கல்வித் துறையின் தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரச் சான்று பெற்ற பள்ளிகளின் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+