அனிதா பணம் கட்டி படித்ததற்கு ஆதாரம் இருக்கா?...செய்தியாளர்கள் கேள்வியில் சிக்கி திணறிய கிருஷ்ணசாமி!
மாணவி அனிதா தனியார் பள்ளியில் பணம் கட்டிக் படித்ததாக டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதையடுத்து அதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா என்று கேள்விகளால் துளைத்தனர் பத்திரிக்கையாளர்கள்.
சென்னை : மாணவி அனிதா பணம் கட்டி தனியார் பள்ளியில் படித்ததாக டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதால் அதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று பத்திரிக்கையாளர்கள் அவரை கேள்விகளால் துளைத்துவிட்டனர்.
அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி விசாரணை கோரி முதல்வர் பழனிசாமியிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமைச் செயலகத்தில் மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது பத்திரிக்கையாளர்களுக்கும் அவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

மாணவி அனிதா அரியலூரில் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றரை லட்சம் கட்டி படித்துள்ளார் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். இதற்கு பத்திரிக்கையாளர்கள் அதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டனர். அது தகவல் தான் நீங்கள் சொன்னால் நான் மாற்றிக் கொள்கிறேன் என்று தன்னுடைய கருத்தில் இருந்து பின்வாங்கினார்.
இதே போன்று தனது பேட்டியின் போது அடிக்கடி இன்றைய செய்தி அனிதா மரணத்திற்கு விசாரணை வேண்டும் என்பது தான் வேறு விஷயங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார். அதற்கு பத்திரிக்கையாளர்கள், தாங்கள் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கக் கூடாது என்று வறுத்தெடுத்துவிட்டனர்.
மேலும் இறுதியாக டாக்டர் கிருஷ்ணசாமியிடம் உங்கள் மகள் எவ்வளவு மதிப்பெண் என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளிக்காமலேயே கிருஷ்ணசாமி ஓட்டம் பிடித்தார்.












Click it and Unblock the Notifications