ஜெ. வழக்கு சிந்துபாத் கதை போல மர்மமாக உள்ளது: டாக்டர் கிருஷ்ணசாமி
மதுரை: ஜெயலலிதா வழக்கில் நடைபெற்ற விவகாரங்களில் சிந்துபாத் கதை போல் மர்மம் நீடிக்கிறது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தேகம் எழுப்பியுள்ளார். இது குறித்து சர்வதேச விசாரணை அமைப்பை வைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருப்பதால், ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கக்கூடாது. அவர் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று கூறினார்.

தவறாக தீர்ப்பு வழங்கும்போது அந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்து தீர்ப்பு வழங்கிய உதாரணங்கள் உள்ளன. ஆனால், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மவுனமாக இருப்பது ஏனென்று தெரியவில்லை.
நீதிபதி குமாரசாமியின் கணக்கீட்டில் இமாலய தவறு நடைபெற்றுள்ளது. சொத்து மதிப்பை சரியாக கணக்கிட்டு இருந்தால் நிச்சயம் தண்டனை வழங்கப்பட்டிருக்கும். அச்சுறுத்தல், மிரட்டல், ஆசைவார்த்தை அளிக்கப்பட்டதுதான் இந்த தவறுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் கொள்ள செய்கிறது.
ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பில் மத்திய அரசின் தலையீடு உள்ளது. அவசரம் அவசரமாக சொத்து மதிப்பை தவறாக கணக்கீடு செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மிகப்பெரிய அதிகார மையத்தில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கலாம்.
நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதில் கர்நாடக அரசு தாமதம் செய்யக்கூடாது. மேல்முறையீடு செய்வதன் மூலம் கர்நாடக அரசுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்க வேண்டும்.
நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கிய பிறகு ஜெயலலிதா வழக்கில் நடைபெற்ற விவகாரங்களில் சிந்துபாத் கதை போல் மர்மம் நீடிக்கிறது. இது குறித்து சர்வதேச விசாரணை அமைப்பை வைத்து விசாரிக்க வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications