For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்.கே. நகரில் ஆவின் பாலுடன் பணம் கொடுக்கும் அதிமுகவினர்: ராமதாஸ் குற்றச்சாட்டு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ஆர். நகர் தொகுதியில் ஆளும் அதிமுக ஆவின் பாலுடன் சேர்த்து வாக்காளர்களுக்கு பணம் தருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அந்த தொகுதியில் தீயாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை வெற்றி பெற வைக்காமல் ஓய்வது இல்லை என்ற எண்ணத்துடன் அதிமுகவினர் செயல்பட்டு வருகிறார்கள். ஜெயலலிதா நாளை ஆர்.கே. நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஆர்.கே.நகரில் ஆவின் பாலில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்: ஆளுங்கட்சி பாலுடன் தான் பணம் தருகிறது. So,ஆளுங்கட்சி வழியே..தேர்தல் ஆணையம் வழி! என்று தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Dr. Ramadoss tweeted that, Ruling party is giving money along with milk to the voters of RK Nagar constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X