ஜெயலலிதாவிற்கு அன்புமணியோடு வந்து டாக்டர் ராமதாஸ் நேரில் அஞ்சலி
மறைந்த ஜெயலலிதாவிற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: மறைந்த ஜெயலலிதாவிற்கு தனது மகனும், முன்னாள் அமைச்சருமான அன்புமணி ராமதாஸ்சுடன் நேரில் வந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த ஜெயலலிதாவின் உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு இந்திய அரசியல் தலைவர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், உயர் அதிகாரிகள் என அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

சற்று முன்னதாக, பிரதமர் மோடி ராஜாஜி ஹாலுக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார். 4 மணியளவில் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்க உள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள் மற்றும் விஐபியினர் ராஜாஜி ஹாலில் இறுதி அஞ்சலி செலுத்த குவிந்தனர்.
இதனிடையே, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ராஜாஜி ஹாலுக்கு நேரில் வந்து மலர் வளையம் வைத்து ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது மகனும் முன்னாள் அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் மற்றும் ஜி.கே. மணி ஆகியோர் உடன் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.












Click it and Unblock the Notifications