இனியும் என்ன தாமதம்? ஜல்லிக்கட்டுக்கு உடனே அவசர சட்டம் கொண்டுவர ராமதாஸ் வலியுறுத்தல்
ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வழக்குகள் நிலுவைகள் இருக்கும் போது அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட முன்னுதாரணங்கள் உண்டு எனவும் ராமதாஸ
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உடனே அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராதமாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:
ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க வாய்ப்பில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆகையால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டும் நடத்த முடியாமல் போனால் அதற்கு கையாலாகாத தமிழக அரசும், துரோகம் செய்யும் மத்திய அரசும் தான் பொறுப்பு.
ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு அனைத்து மக்களும் ஆதரவு தருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
அவசர சட்டம் கொண்டுவர முடியாது என மத்திய அரசு கூறுவது நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் செயல். இது வேதனையையும் ஏமாற்றத்தையும் தருகிறது.
வழக்குகள் நிலுவையில் இருந்தபோதும் அவசர சட்டம் கொண்டுவந்த முன்னுதாரணங்கள் உண்டு. ஆகையால் மத்திய அரசு அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.