நள்ளிரவில் டாஸ்மாக் கடையில் மது கேட்டு போலீஸ்காரருக்கு 'பஞ்ச்' விட்ட குடிமகன் கைது
சேலம்: சேலத்தில் நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு வந்து மது கேட்டு போலீஸ்காரரை தாக்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருக்கும் கெங்கவல்லியில் உள்ள சிவன் கோவில் எதிரே டாஸ்மாக் கடை உள்ளது. கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு அரசு சிறப்புகாவல் படைப்பிரிவில் காவலராக உள்ள தனசேகர் நேற்று முன்தினம் இரவு அந்த டாஸ்மாக் கடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அவர் பணியில் இருக்கையில் நள்ளிரவு 12 மணிக்கு கணவாய்க்காட்டைச் சேர்ந்த பிரகாஷ்(30) கடைக்கு வந்து மது தருமாறு கூறி அவரிடம் பிரச்சனை செய்துள்ளார். இப்பொழுது எல்லாம் மது அளிக்க முடியாது என்று தனசேகர் தெரிவித்ததை கேட்டு பிரகாஷ் ஆத்திரம் அடைந்துள்ளார்.
மது அளிக்காவிட்டால் கடையை தீ வைத்து எரித்துவிடுவேன் என பிரகாஷ் மிரட்டியுள்ளார். மேலும் தனசேகரின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார். இதையடுத்து அவர் பிரகாஷ் மீது கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications