மது போதை.. மனைவியுடன் சண்டை.. சொந்த வீட்டையே கொளுத்திய ”குடி”மகன்
தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே மனைவியுடன் தகராறு செய்த கணவர் மது போதையில் வீட்டை கொளுத்திய சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
சாத்தான்குளம் அருகே அரசூர் புதுக்கோட்டையை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன். இவரது மனைவி ஜெயலட்சுமி.
இவர்களுக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியன் தினசரி மது அருந்திவிட்டு போதையில் வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றும் வழக்கம் போல மது போதையில் வீட்டுக்கு வந்த சுப்பிரமணியனுக்கும்,ஜெயலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி வீட்டையும், அருகில் போடப்பட்டிருந்த செட்டையும் தீவைத்து கொளுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
ஜெயலட்சுமியின் புகாரின் பேரில் தட்டார் மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். தற்போது ஜெயலட்சுமி நான்கு குழந்தைகளுடன் வாழ வீடு இன்றி தவித்து வருகிறார்.