For Daily Alerts
Just In
கன மழை எதிரொலி திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
கன மழை காரணமாக திருவாரூரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
திருவாரூர்: திருவாரூரில் பெய்த கன மழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு நேற்று இரவில் கன மழை பெய்ததால் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இரு வாரங்களுக்கு முன்பு தொடங்கிய வட கிழக்குப் பருவமழை தமிழகத்தில் இன்னும் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பெருமழை பெய்து வருகிறது. அதேபோல் டெல்டா மாவட்டங்களும் இதனால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றது.
நேற்று இரவில் திருவாரூரில் கனமழை மழை பெய்தது. நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது.
இதன் காரணமாக திருவாரூர் மற்றும் மன்னார்குடி பகுதிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதையடுத்து திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை திருவாரூர் மாவட்ட பொறுப்பு ஆட்சியர் சக்திமணி அறிவித்தார்.
Comments
thiruvarur chennai tamilnadu kanchipuram rain north east monsoon floods சென்னை தமிழ்நாடு மழை வடகிழக்கு பருவமழை வெள்ளம் பள்ளிகள் திருவாரூர்
English summary
Rain started reach its peak again in many parts of Delta region. Due to heavy rain holiday announced for schools in Thiruvarur.
Story first published: Wednesday, November 8, 2017, 7:54 [IST]