Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதுக்காகத்தான் விஜயபாஸ்கருக்கு பதவி கொடுத்ததாமே..? குண்டுபோடும் துரைமுருகன்!!

குட்கா ஊழலில் காட்டிக்கொடுக்காமல் இருக்கவே அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அதுக்காகத்தான் விஜயபாஸ்கருக்கு பதவி கொடுத்ததாமே..? துரைமுருகன்!!

    கோவை: குட்கா ஊழலில் யாரையும் காட்டிக்கொடுக்காமல் இருக்கவே அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளர்களாக முன்னாள் மத்திய மந்திரி என்.செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் எம்.பரஞ்சோதி, ப.மோகன் மற்றும் முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., சின்னத்துரை ஆகிய 5 பேர் புதிதாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.

    இந்நிலையில் மேலும் 3 பேரை கட்சி தலைமை அமைப்புச் செயலாளராக நியமித்து நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ஏ.பாப்பா சுந்தரம், மதுரை புறநகர் மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துராமலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    எதிர்க்கட்சிகள் விமர்சனம்

    எதிர்க்கட்சிகள் விமர்சனம்

    ஏற்கனவே குட்கா ஊழல்வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்புள்ளதாக கூறி அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அவருக்கு கட்சியில் பதவி கொடுக்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

    மின்தடையே இருக்காது

    மின்தடையே இருக்காது

    இந்நிலையில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், பேசியதாவது "தமிழகத்தில் மின்தடையே இருக்காது என ஒரு அமைச்சர் சொல்கிறார்.

    மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்

    மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்

    ஆனால் முதல்வரோ நிலக்கரி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புகிறார். முதலில், அமைச்சர்கள் உட்கார்ந்து தமிழகத்தின் மின்சார நிலைமையை பேசிய பின்னர், மக்களுக்கு என்ன நிலைமை என்பதை தெரிவிக்க வேண்டும்.

    காட்டிக்கொடுத்துவிடுவார் என்ற பயம்

    காட்டிக்கொடுத்துவிடுவார் என்ற பயம்

    குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. பதவி கொடுக்கவில்லை என்றால் யார், யாரையோ காட்டிக்கொடுக்கும் சூழ்நிலை வரும் என்ற பயத்தில் தான் அவருக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது என துரைமுருகன் தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+