சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட துரைமுருகன் வீடு திரும்பினார்!
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வீடு திரும்பினார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.

இதனிடையே சென்னை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் திடீரென இன்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் மாலையில் துரைமுருகன் வீடு திரும்பினார்.












Click it and Unblock the Notifications