For Daily Alerts
Just In
லோக்சபா தேர்தல் விருப்ப மனு: திமுகவில் துரைமுருகன் மகனுக்காக 130 பேர் பணம் கட்டினர்!
விருப்ப மனுக்கள் இன்று மாலை 6 மணி வரை பெறப்படுகிறது. கடைசி நாள் என்பதாலும் இன்று தை அமாவாசை என்பதாலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க.தலைவர் கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆகியோர் திருச்சி தொகுதியில் போட்டியிட மனு அளித்தார்.
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட 130 பேர் விருப்ப மனு கொடுத்தனர். வட சென்னை தொகுதிக்கு டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி மனு அளித்தார்.
முன்னாள் சபா நாயகர் சேடப்பட்டி முத்தையா விருது நகர் தொகுதிக்கும் முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், திண்டுக்கல் தொகுதிக்கும் மனு கொடுத்தனர்.
முன்னாள் அமைச்சர் கரூர் சின்னச்சாமி கரூர் தொகுதிக்கும்,கன்னியாகுமரி தொகுதிக்கு கேட்சன் பணம் கட்டினார்.
English summary
More than 13 persons have sought seat for Duraimurugan's son Karthir Anand in the LS election.
Story first published: Thursday, January 30, 2014, 15:31 [IST]