போக்குவரத்து லஞ்சத்தை ஒழிக்க வந்துருச்சு “இ-சலான்” கருவி
கோவை : கோவை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க நவீன வசதிகளுடன் கூடிய "இ சலான்" சிஸ்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அபராதம் வசூலிக்கும் போலீசாரும், வாகன ஓட்டிகளும் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபட முடியாது.
மாநிலம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து கைப்பட ரசீது எழுதி "சீல்" வைத்து தருகின்றனர்.

ரசீது முறைகேடு:
இந்த முறையில் வாகன ஓட்டி, கமிஷனர் அலுவலகம், கோப்புக்களுக்கு என்று மூன்று ரசீதுகள் எழுதப்படுகின்றன.இதில் முறைகேடுகள் நடக்க பெருமளவில் வாய்ப்புள்ளது.

இ-சலான் முறை:
இந்த முறைகேடுகளை தவிர்க்க தடுக்க மாநிலம் முழுவதும் போலீஸ் கமிஷனர் அலுவலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் "இ சலான்" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சோதனை முயற்சி:
இதற்காக போக்குவரத்து போலீசாருக்கு நவீன வசதிகளுடன் கூடிய கருவி கையில் வைத்து உபயோக்கிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. கோவை மாநகர போக்குவரத்து போலீசில் ஒரு மாத காலம் சோதனை முயற்சியாக நேற்று முதல் இத்திட்டம் துவக்கப்பட்டது.

பதிவாகும் தகவல்கள்:
இக்கருவியில் போக்குவரத்து விதிமுறை மீறும் வாகனங்களின் எண்ணை பதிவு செய்தால் போதும். வட்டார போக்குவரத்து அலுவலக "சர்வர்"களுடன் இணைக்கப்பட்டுள்ள கருவியில் குறிப்பிட்ட வாகன ஓட்டியின் பெயர், வாகனத்தின் இன்ஜின் எண், வீட்டு முகவரி உள்பட அனைத்து தகவல்களும் உடனடியாக தெரிந்து விடும்.

உடனே “பில்லிங்” :
"நோ பார்க்கிங்" லைசன்ஸ் இல்லாதது போன்ற 78 போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த தகவல்கள் இதில் உள்ளன. அபராத தொகை சலானை "பிரிண்ட்" எடுத்து வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும்.

ஜிபிஎஸ் வசதி உள்ள கருவி:
இதன் மூலம் போலீசார் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க முடியும்.போக்குவரத்து போலீசார் கூறுகையில், "இந்த நவீன கருவியில் ஜிபிஆர்எஸ், ஜிபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் மூலம் போலீசாரின் இருப்பிடம் நடவடிக்கைகளை உயர் அதிகாரிகள் கண்காணிக்கலாம்.

15 ஸ்டேஷன்களுக்கு கருவி:
தங்கள் எல்லைக்குள் இல்லாமல் வேறு பகுதியில் போலீசாரால் அபராதம் வசூலிக்க முடியாது.மாநகரின் 15 ஸ்டேஷன் போக்குவரத்து எஸ்ஐகளுக்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது.

மாற்றி பயன்படுத்த இயலாது:
ஒருவர் கருவியை வேறு ஒருவர் மாற்றி பயன்படுத்த முடியாது. இதற்காக பிரத்யேக ஐ.டி. மற்றும் "பாஸ்வேர்ட்" எண் கொடுக்கப்பட்டுள்ளது. திருட்டு வழக்கில் தேடப்படும் வாகனங்கள் பெயர் மோசடி உள்ளிட்ட அனைத்தையும் கண்டுபிடித்துவிடலாம்"என்றனர்.

பிரிவு வாரியாய் கருவி:
கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து போலீஸ் எல்லைகளுக்கு ஏழு, மேற்கு பிரிவு போலீஸ் எல்லைகளுக்கு எட்டு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications