இனி உண்டியலில் ரூபாய் போட வேண்டாம்.. திருத்தணி கோயிலில் இ-உண்டியல் ரெடி
ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் காணிக்கை செலுத்தும் வகையில் இ-உண்டியல் திருத்தணிக் கோயிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருத்தணி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பணம் என்று சொல்லப்படும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறைகளை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருத்தணி கோயிலில் இ-உண்டியல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த பிறகு, கோயில் உண்டியல்களில் நிறைய பழைய ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் போட்டு வந்தனர். இவை கணக்கில் காட்டப்படாத பணம் என்று கூறப்படும் நிலையில் இதனையும் கட்டுப்படுத்தும் வகையில் திருத்தணியில் இ-உண்டியல் அறிமுகம் செய்ப்பட்டுள்ளது.

திருத்தணியில் உள்ள முருகன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்றாடம் வந்து செல்கின்றனர். அவர்கள் ஆயிரக்கணக்கில் அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அவர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக இ-உண்டியல் முறையை கோயில் நிர்வாகம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், பக்தர்கள் தங்களது காணிக்கை தொகையை கோயிலுக்கு செலுத்தலாம்.இதற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் மலைக்கோயிலில் இ-உண்டியல் அமைத்துள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள இயந்திரம் மூலம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் காணிக்களை பக்தர்கள் செலுத்தலாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications