சென்னை ஊட்டி ஆனது.. அதிகாலை முதல் லேசான மழை.. 2 நாட்களுக்குத் தொடருமாம்!
சென்னை: சென்னை நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நகரமே குளிர்ந்து போய்க்
காணப்படுகிறது.
கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது மாலையில் சென்னையில் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வெப்ப நிலை தணிந்து குளுமை நிலவுகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலையிலிலிருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரமே குளிர்ந்து போய் விட்டது. ஊட்டி போல குளுகுளுவென மாறிக் காணப்படுகிறது தலைநகரம்.
புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் நகர்ப் பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. பேனைப் போட்டாலே குளிரும் அளவுக்கு தற்போது சென்னையில் கிளைமேட் மாறிப் போயுள்ளது. கிட்டத்தட்ட ஊட்டி அளவுக்கு குளிர்ச்சியான பிரதேசமாக மாறியுள்ளது சென்னை.
சென்னையின் பல பகுதிகளில் ஏன் புறநகர்ப் பகுதிகளிலும் கூட நிலத்தடி நீர் இறங்கிப் போய் மக்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது. தற்போது பெய்து வரும் மழை தொடர்ந்தால் இந்தப் பிரச்சினைக்கு தற்காலிகமாக ஒரு தீர்வு ஏற்படும் என்பதால் மக்கள் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே இந்த மழை இன்னும் 2 நாட்களுக்குத் தொடரும் என்று வானிலை மையம் மேலும் சந்தோஷச் செய்தியை அளித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications