மின் ஊழியர் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.. பிப்.12 வரை போராட்டம் நடைபெறாது!

நாளை நடைபெற இருந்த மின் ஊழியர் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை நடைபெற இருந்த மின் ஊழியர் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக மின் வாரிய ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். முக்கிய கோரிக்கையாக குறைந்தபட்ச மாத சம்பளமாக 18 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கேட்டார்கள்.

EB workers association postpones their strike

அதேபோல் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்றனர். மேலும் ஊதிய உயர்வு மாறிலியை 2.57 சதவிகிதமாக மாற்ற வேண்டும் என்றனர்.

முக்கியமாக 2015 டிசம்பரில் இருந்து வர வேண்டிய 26 மாத நிலுவை தொகையை திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதற்காக காலவரையற்ற வேலைநிறுத்தம் நாளை முதல் நடக்கும் என்று கூறி இருந்தனர்.

ஆனால் இன்று தமிழக அரசு அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. அதில் பிப்.12 வரை முடிவெடுக்க அவகாசம் கேட்டு இருந்தது.

இதன் காரணமாக நாளை நடைபெற இருந்த மின் ஊழியர் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. பிப்.12 வரை போராட்டம் நடைபெறாது என மின் ஊழியர் சங்கம் தெரிவித்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+