முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்த தேர்தல் ஆணையம்
சென்னை: முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்து வருகிறார்கள்.
பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு சற்று மந்தமாக உள்ளது. வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் உற்சாகமாக வந்து வாக்களித்து வருவதை பார்க்க முடிகிறது.
#TamilNaduElection: Volunteers assist senior citizens who arrive at a polling booth in Chennai to cast their vote. pic.twitter.com/9EXuQmtzPm
— ANI (@ANI_news) May 16, 2016
மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடிகளில் சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடக்க முடியாத முதியவர்கள் வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச்சாவடிகளில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் முன்பே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications