வெறும் பாட்டில்தான்.. அம்மா குடிநீர் பாட்டிலில் லேபிள் கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி
சேலம்: ஏற்காடு சட்டசபைத் தொகுதிக்குள் அம்மா குடிநீர் பாட்டில்களை லேபிள் இல்லாமல் விற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு அறிமுகப்படுத்திய திட்டம்தான் அம்மா குடிநீர். இந்த பாட்டிலில் இரட்டை இலை பொறிக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே சர்ச்சை உள்ளது. இந்த நிலையில், தற்போது அம்மா குடிநீர் பாட்டில்களில் இடம் பெற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் படமும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

ஏற்காடு சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகி உள்ளன. இந்நிலையில் அம்மா குடிநீர் பாட்டிலில் வெளியே ஒட்டப்பட்டுள்ள லேபிளில் ஜெயலலிதா மற்றும் இரட்டை இலை படம் இடம்பெற்றுள்ளதால், அதனை அகற்ற உத்தரவிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு திமுக கோரிக்கை விடுத்திருந்தது.
இதைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம் தற்போது லேபிளை அகற்றச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் லேபிளை அகற்றி விட்டு வெறும் பாட்டில்தான் குடிநீரை விற்பனைக்கு விட வேண்டும் என்று அது உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications