பேஸ்புக், டிவிட்டரில் கலக்கலாம்.. திமுக மாணவர் அணி பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் பச்சைக் கொடி!
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பேஸ்புக், டிவிட்டரில் பிரசாரம் மேற்கொள்ள திமுக மாணவர் அணிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள. புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவரங்கம் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் இணைய தளம் (Face Book,Twitter, email, Internet Campaign) மூலம் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரி தேர்தல் பிரச்சார ஊடகப் பிரிவு தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் இள.புகழேந்தி மனு செய்திருந்தார்.

அந்த மனுவினை பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரி, தி.மு.க. மாணவர் அணியினர் இணைய தளப் பிரச்சாரம் செய்யலாம் என அனுமதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இணையதளப் பிரச்சாரத்தை தி.மு.க. மாணவர் அணியினர் தொடங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்து வருவதோடு மட்டுமல்லாமல், வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தல், திண்ணைப் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம் போன்றவற்றில் ஈடுபட்டு கழக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications