தேர்தல் பணிகளை ஆய்வு செய்ய நசீம் ஜைதி தலைமையிலான 9 பேர் குழு வருகை- புதுவையில் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுவை சட்டசபை தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தலைமையிலான குழு தமிழகம் வருகை தந்துள்ளது. அக்குழு தற்போது புதுவையில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுவை சட்டசபை தேர்தல் மே 16-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை முழு வீச்சில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

EC to review Tamil Nadu, Puducherry poll preparations

தமிழகத்தில் 9 ஆயிரத்து 360 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை அதிக பதற்றம், பதற்றம் என்பதுபோன்ற அளவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அதிக பதற்றத்துக்குரிய வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்படுவார்கள். இதனிடையே தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி தலைமையில் 9 பேர் கொண்ட குழு இன்று சென்னை வந்தது.

அக்குழுவில் தேர்தல் கமிஷனர்கள் ஏ.கே.ஜோதி, ஓம் பிரகாஷ் ராவத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தற்போது புதுச்சேரியில் முகாமிட்டுள்ள அக்குழுவினர் நாளை சென்னையில் ஆய்வு நடத்துகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+