காஞ்சிபுரம் "டான்" ஸ்ரீதரின் மனைவி குமாரி கைது.. அமலாக்கப் பிரிவிடம் சிக்கினார்!

காஞ்சிபுரம் டான் ஸ்ரீதரின் மனைவி குமாரியை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவரும், பல சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து தற்போது துபாயில் பதுங்கியிருப்பவருமான ஸ்ரீதரின் மனைவி குமாரியை அமலாக்கப் பிரிவு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இன்டர்போல் போலீஸாரே தேடி வரும் தாதா ஸ்ரீதர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். ரூ. 150 கோடிக்கு மேல் சொத்துக்களை வைத்துள்ளவர். அத்தனையையும் தற்போது அமலாக்கப் பிரிவு முடக்கி வைத்துள்ளது.

ED officials grill Don Sridhar's wife

சாராய வியாபாரி சக்கவர்த்தியிடம் அடியாளாக சேர்ந்து பின்னர் அவரது மகளையே திருமணம் செய்து கொண்டு தனிப் பெரும் கள்ளச்சாராய வியாபாரியாக உருவெடுத்தவர் ஸ்ரீதர். ரியல் எஸ்டேட், செம்மரக் கடத்தல் என பல தொழில்களில் ஈடுபட்டவர்.

உள்ளூரில் பிரச்சினைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து துபாய்க்குத் தப்பி ஓடி விட்டார். இப்போது வரை அங்குதான் இருக்கிறார். அவரைக் கைது செய்து கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை பலன் தரவில்லை.

இந்த நிலையில் ஸ்ரீதரின் மனைவி குமாரியையும் போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று அவர் வெளிநாடு ஒன்றிலிருந்து சென்னைக்கு வந்தார். அங்கு வைத்து அவரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
ஸ்ரீதர் சொத்தில் 80 சதவீதம் குமாரி பெயரில் இருப்பதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் ஸ்ரீதரையும் பிடிப்போம் என்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடர்பான செய்திகள்:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+