நீட் தேர்வு, வர்தா புயல் நிவாரணம், ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி மோடியிடம் கோரிக்கை வைத்த எடப்பாடி
வர்தா புயல் நிவாரணம், நீட் தேர்வு விலக்கு, ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்ததாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சென்னை: தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3 நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். வர்தா புயல் நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் பிரதமர் மோடியிடம் வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் மத்திய நகர்ப்புறவளர்ச்சித்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவை அவரது அமைச்சகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் நகரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். இலங்கை சிறையிலுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தினேன். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தினேன். வறட்சி நிவாரணம், வர்தா புயல் நிவாரண நிதி வழங்குமாறு கோரியுள்ளேன். ஜல்லிக்கட்டுக்கு உதவிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தேன்.
மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் கோரிக்கை விடுத்தேன். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன்.
காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்க வலியுறுத்தினேன். தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தாம்பரம்-செங்கல்பட்டு சாலையை விரிவாக்க கோரிக்கை வைக்கப்பட்டது. கூடங்குளத்தில் 3வது அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
பச்சைக் கொடி காட்டிட்டாரா விஜய்? பவன் கல்யாண் சொன்ன "நீங்க பாதி.. ஆனாலும் யாருமே எதிர்பாராத சிக்கல் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து?












Click it and Unblock the Notifications