திருச்சி, விழுப்புரம் உட்பட 4 மாவட்ட எம்எல்ஏக்களுடன் முதல்வர் 3 மணிநேரம் ஆலோசனை- தக்க வைக்க முயற்சி?
திருச்சி, விழுப்புரம் உட்பட 4 மாவட்ட எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சுமார் 3 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.
சென்னை: திருச்சி, விழுப்புரம் உட்பட 4 மாவட்ட எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமது இல்லத்தில் இன்று சுமார் 3 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.
தினகரன் ஆதரவு 22 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்தது.

கைவிரித்த ஆளுநர்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஆளுநர், அதிமுகவில் நடப்பது உட்கட்சி பிரச்சனை; பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியாது என கைவிரித்து விட்டார்.

ஜனாதிபதியுடன் சந்திப்பு
இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் எதிர்க்கட்சிகள் முறையிட உள்ளன. இந்நிலையில் திடீரென அதிமுக எம்.எல்.ஏக்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னைக்கு வரவழைத்துள்ளார்.

எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை
இன்று முதல்வர் எடப்பாடியார் தமது இல்லத்தில் திருச்சி, விழுப்புரம் உட்பட 4 மாவட்டங்களின் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பில் மாவட்ட அமைச்சர்களும் உடன் இருந்தனர். இந்த ஆலோசனை சுமார் 3 மணிநேரம் நடைபெற்றது.

தக்க வைக்க முயற்சி?
எம்.எல்.ஏக்களின் தொகுதிகளுக்கான தேவைகள் உள்ளிட்டவை இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டன. இருப்பினும் எம்.எல்.ஏக்களை தக்க வைக்கும் முதல்வர் எடப்பாடியாரின் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications